மூன்றாம் கவியரங்கம்
நமது மூன்றாம் இணையக் கவியரங்கத்தில் இடம்பெற்ற கவிதைகள்:
1. வெளிச்சப்புள்ளிகள் - ஷைலஜா
வெளிச்சப்புள்ளிகள்
வேகமாய் விழுந்தன
விரல்கள் செய்த வித்தகத்தில்
விதவிதமாகப்
பூக்கள் பூத்தன
முதல்நாள் நடந்த
ஊர்க்கலவரத்தில்
தெருவெங்கும் ரத்தப்புள்ளிகள்
அறுந்து தொங்கும்
கைகால்கள்
அவலம்கொண்ட
தோள்களின் இறுக்கம்
பாரமிறக்க
இறைஞ்சுமிறுதி
நொடித்துடிப்புசுழிகளில்
இன்னமும்
மிச்சப்படும் பிணம்
ஊடுறுவும் பெருவலி.
குற்றமனது குறுகுறுக்கிறது.
வெளிச்சப் புள்ளிகளாய்
இருந்த வெண்புள்ளிகளும்
பூக்களுமிப்போது
இரத்தச் சிவப்பாய்,
அழகின்றி மென்மையின்றி
என் வீதிச்சித்திரம்.
***
2. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
பையில்
ஒன்றுமில்லாதவர்களுக்கு
வாழ்க்கையும்
அப்படித்தான் இருக்கும்
ஒன்றுமில்லாததாய்.
***
3. ஒன்றுமில்லை - பா நந்தன்
ஒன்றுமற்ற பரவெளிக்குள்
ஒன்றுமற்ற ஒரு நிலைக்குள்
ஒன்றுமற்ற ஒன்றாகி
ஒன்றி நிற்கும் நிலை விடுத்து
ஒன்று வேண்டிஒன்று கிடைத்து
ஒன்று கிடைத்ததும்
ஒன்று மறந்து
இறுதியில்
ஒன்றுமில்லை
என்றுணர்ந்து.
***
4. நிறம் - கே.வி.ராஜா
சந்தோஷ வெள்ளை சடுகுடு ஆடுமென்
வெந்தபுண் நீக்க வெளிர்பச்சை - அந்த
அகக்கண் வழியே ஆர்ப்பரிக்கும் எண்ண
நிகழ்வுக்கும் உண்டே நிறம்
விளக்கம்: சந்தோஷம் வர்றப்போ மனசு முழுக்க வெள்ளை நிறம் தோன்றி சடுகுடு ஆடும். வெளிர்பச்சை பார்க்கிறப்போ நொந்துபோன மனசுக்குள்ளே ஒரு இதமான உணர்வு வரும். கண் மூடி அகக்கண் வழியாக மனசை ஒன்றுபடுத்தும்போது ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு நிறம் உருவாகும்
***
5. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
எப்போதும்இது தான் பதில்.
கண்களில் ஆர்வம் மின்ன
பிச்சை கேட்பவனுக்கு.
கோபத்தில் இருக்கும் மனைவியிடம்
பரிவுடன் கணவன்
"என்னம்மா?ஏன் ஒரு மாதிரி இருக்கே"
என்று கேட்கும் கேள்விக்கு.
"எத்தனை தங்கப் பதக்கம் வாங்கினீர்?"
இந்திய ஒலிம்பிக்
அணியிடம்கேட்ட போது.
"எத்தனை நன்மை செய்தாய் மக்களுக்கு?"
என அரசு இயல் வியாதியிடம்
எதிரிக்கட்சிக்காரன் கேட்டபோது.
அப்புறம் என்னிடம்
நீங்கள்கேட்கும்போது,
"ஏதோ கவிதையென்று எழுதினாயாமே?"
***
6. வானவில் மனிதர்கள் - ஷக்திபிரபா
அண்ணாந்துப் பார்க்கிறேன்
மேகங்களின் முழக்கத்தைத் தொடர்ந்து
மின்னலின் கேலிச் சிரிப்புகள்.
பெருக்கெடுத்த மழையின் வேகம்
மெல்லச் சாரலாய் குறைந்தது.
வெளிச்சம் பாய்ச்சிய கதிரோன்
துணையில் வானம்
நீலத்தைத் தொலைத்து
வர்ணம் பூசியிருந்தது.
மெருகேறியிருந்தது.
இங்கேயும் நிகழ்ச்சிகள்
இடிதாங்கியாய் இறக்கி
கொக்கரிப்புகளாய் இடித்துதனியாய்,
மழையாய் உருக்கிபல
கோணங்களில் வெளிச்சம்
பரப்பிவர்ணம் பூசிக்கொண்டு
வசீகரமாய் மெருகேற்றியிருக்கிறது
என்னை.
***
7. தொலைந்து போனவை - ஷக்திபிரபா
காலையிலிருந்தே
துழாவிக்கொண்டிருக்கிறேன்
எழுதுகோல் ஒன்று கைக்கெட்டவில்லை
ராசியான பொருளொன்று
கை நழுவிப் போகையில்
பாசிபடிந்து மனமெங்கும்
இருள் கவ்விக் கிடக்கிறது
மேஜையின் மேலேகைப்பையின்
அடக்கத்தில்அலுவலக கேபினின்
அடுக்குக் கோப்புக்குள்
ஜீன்ஸ் பாக்கெட்டின்
ரகசிய அறையில்
அடுக்களையில் அடுக்கிய
பாட்டிலின் நடுவில்
குளிக்கச் சென்ற குழாயடி
பக்கத்தில் மிச்சம் வைக்காமல்
அத்தனை வேட்டைகள்
மாய்ந்து தேடியதன்
ஏமாற்ற மிச்சங்கள்
பின்னோக்கியே பயணத்தை
உற்று நோக்கினால்
அறியாப் பருவத்தில்
அநியாயமாய் தொலைத்ததுண்டு
பல்பம் ஸ்லேட்டுடன்
பென்சிலும் போனதுண்டு
பத்து நிமிட திட்டிற்கு பிறகு
புதிதாய் ஒன்று
பாக்கேட்டில் முளைக்கும்
சேர்ந்து தேட அம்மாவும் அப்பாவும்
சிரித்து கோள்மூட்டி
பொய்க் கோப பூச்சுடன்
கூடவே தேடும் அருமைத் தங்கை
தொலைந்து விட்ட
காதலைக் கூட
தேடிச் சேர்த்த நண்பர் குழாம்.
அப்பொழுதெல்லாம்
தொலைந்தால் கிடைக்கும்
புதிதாய் அழகாய்
வேறொன்று முளைக்கும்.
பத்து மணி நேரத்
தேடலின் விடையாய்
ஷர்ட் பாக்கெட்டின்
பதுங்கியே இருந்த
பேனாவும் கிடைத்தது,
சோர்வும் பறந்தது
பேனாவும் பென்சிலும்
போனாலும் கிட்டிவிடும்
நிஜமாய் தொலைத்த
பட்டியல் நீளம்
சமீபத்தில் தொலைந்த
நண்பனைச் சேர்த்து.
சொல்லாமல் கொள்ளாமல்
ஒழிந்த போன உணர்வுகளும்
உறவுகளும் நட்பும் சுற்றமும்
நெருக்கமும் இளமையும்
தேடிக்கொண்டே
நாளைக் கழிக்கிறேன்
தொலைந்தவைகள் இன்றும்
தொலைந்தவைகளாகவே.
***
8. தொலைந்தவை - ஐயப்பன்
திரைத் தாரகைகளை வாழ்வில்
நிஜத்தாரகைகளாய் எண்ணிதன்
வாழ்வை தொலைக்கும் மூடர்கள்
-0-
மண்ணில் தொலைத்து தன்னை
விண்ணில் தேடும் மானிடர்கள்.
கருக்கல் தொடங்கும் நேரம்
எப்போதோ தொலைத்த
நிம்மதியை தேடி
தெருவோரம் ஓடும் மக்கள்
இவர்களிடையே
எதையும் நான் தொலைத்ததாய்
நினைவில் இல்லை.
-0-
இருந்தும் ஏதோ ஒன்றை
இழந்தேனென்று நிதமென்னை
மனம் சாடுகிறது
தினமும் எனைத்தின்னும்
அலுவலகப் பணிப் பூதமும்
சிலநேரம் ஓய்வுணவை
எனக்களிக்கும்
அந்தக் கணங்களிலும்
தொலைந்த எதையோ தேடி
விடியலை தேடும் வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தவை தேடி மனம் ஆர்ப்பரிக்கும்
-0-
ஒருநாள் விடியல்... காலைநேரம்
கண்ணாடி முன் கண்விழிக்க
அடடாஎன்முகம் எங்கே காணவில்லை
***
9. என் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பயணம் - ஷக்திபிரபா
ஒன்றுமில்லா
வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தே போனேன்
மற்றொரு கிரகத்திற்கே
சென்றாலும்துரத்தியே வந்தனர்
வானவில் நிறமிகளாய்
மனிதர்கள்
தொடுவானமாய் நானும்
தப்பி ஓடிக்கொண்டே
***
10. ஒன்றுமில்லை - ஐயப்பன்
இருக்கிறதாம் சிலர் சொன்னார்கள்தேடினேன் ஒன்றுமில்லைஇல்லை என்றால் ஆதாரம் தேடினேன்ஒன்றுமில்லை...
ஏதோ ஒரு உணர்வு உள்ளுள் ஓங்கரித்து எழுந்தாலும்உண்மையில் கடவுளும் காதலும்ஒன்றுமில்லை தான்
***
11. ஒன்றுமில்லை -
இரா.அருள்குமரனின் வசனம் வெண்பாவானது கே.வி.ராஜாவின் வரிகளில்.
தன்னகத்தே கொண்டதை வையகத்தில் தேடினேன்
கண்ணெட்டும் தூரமெங்கும் காணவில்லை - பின்னரே
உன்னுள் இருப்பதை ஊரெங்கும் தேடினால்
ஒன்றுமில்லை என்ற(து) உலகு
***
12. தொலைதூர தொடுவானம் - ஐயப்பன்
தொலைதூர தொடுவானம்
வெகுதூரம் இருந்தாலும்
அருகருகே இருப்பது போல்
அழகாய் ஓர் கனவு வரும்
கனவில் வரும் தேவதைகள்
கை நிறைய வரம் தந்தும்
கண்விழிக்கும் நேரத்திலே
இருப்பதுவோ ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என்றானதை
ஒவ்வொன்றாய் கோர்த்துவைக்க
அழகான வானவில்லாய்
அத்தனையும் அருகருகே
அருகருகே பலநிறங்கள்
அத்தனையும் கண்பறிக்கும்
அதனருகே போகையிலே
நிறம் மாறும் நிறமியாய் நான்
நான் தேடும் வெளிச்சப் புள்ளி
வெகுதூர விண்வெளியில்
கைக்கெட்டா தூரத்தில்
அது தொலைதூர தொடுவானம்
***
13. ஒர் இந்தியக் கோலம் - பா நந்தன்
சில வெளிச்சப் புள்ளிகளோடு
அந்த கோலம் ஆரம்பிக்கப்பட்டது.
வலப்புறமும் இடப்புறமும்ஒரே மாதிரி
மேலும் கீழும் ஒரே மாதிரி
ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி
எங்கோ இருக்கும்
ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து
ஏதேதோ புள்ளிகளை
தொட்டுக் கொண்டு ஏங்கியபடி
எங்கேயோ முடியும் கோடுகளுடன்
தொடரப்பட்டது அந்தக் கோலம்.
ஓர் இடத்திலும்
புள்ளி பிசகாத கோலம்
எப்படியோ கடைசியில்
கோணலாகிவிட்டிருந்தது
அவ்வெளிச்சப் புள்ளிகளின்
சுவடுகளே இல்லாமல்.
***
14. ஒன்றுமில்லை - கீதா
ஆம் நண்பா..
மறைந்த உன்நினைவுகளைத் தவிர
வேறொன்றும் இல்லை
விபத்தில் சிக்கியதும்
வலியில் வாடியதும்
நீ மட்டும் இல்லை..
என் மனதும் தான்
வேதனைப் பூக்களை
வார்த்தையில் கோர்த்தேன்
மனதினுள் பூட்டிவைத்தேன்
அது உனக்கேயானது
தவழ்ந்து வருவது
மாலையின் வாசமான
உன் நினைவுகள் மட்டுமே
வேறொன்றும் இல்லை..
***
15. ஒரு வெண்பா(ம்) - கே.வி.ராஜா.
எடுத்துக் கொடுப்ப தெளிதான வேலை
தொடுப்பதுவே என்பெரும் தொல்லை - அடுத்தவற்(கு)
ஏற்றாற்போல் வார்த்தை எழுதிவைத்து நான்வடிக்க
கற்பனையில் வந்த கவி
***
1. வெளிச்சப்புள்ளிகள் - ஷைலஜா
வெளிச்சப்புள்ளிகள்
வேகமாய் விழுந்தன
விரல்கள் செய்த வித்தகத்தில்
விதவிதமாகப்
பூக்கள் பூத்தன
முதல்நாள் நடந்த
ஊர்க்கலவரத்தில்
தெருவெங்கும் ரத்தப்புள்ளிகள்
அறுந்து தொங்கும்
கைகால்கள்
அவலம்கொண்ட
தோள்களின் இறுக்கம்
பாரமிறக்க
இறைஞ்சுமிறுதி
நொடித்துடிப்புசுழிகளில்
இன்னமும்
மிச்சப்படும் பிணம்
ஊடுறுவும் பெருவலி.
குற்றமனது குறுகுறுக்கிறது.
வெளிச்சப் புள்ளிகளாய்
இருந்த வெண்புள்ளிகளும்
பூக்களுமிப்போது
இரத்தச் சிவப்பாய்,
அழகின்றி மென்மையின்றி
என் வீதிச்சித்திரம்.
***
2. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
பையில்
ஒன்றுமில்லாதவர்களுக்கு
வாழ்க்கையும்
அப்படித்தான் இருக்கும்
ஒன்றுமில்லாததாய்.
***
3. ஒன்றுமில்லை - பா நந்தன்
ஒன்றுமற்ற பரவெளிக்குள்
ஒன்றுமற்ற ஒரு நிலைக்குள்
ஒன்றுமற்ற ஒன்றாகி
ஒன்றி நிற்கும் நிலை விடுத்து
ஒன்று வேண்டிஒன்று கிடைத்து
ஒன்று கிடைத்ததும்
ஒன்று மறந்து
இறுதியில்
ஒன்றுமில்லை
என்றுணர்ந்து.
***
4. நிறம் - கே.வி.ராஜா
சந்தோஷ வெள்ளை சடுகுடு ஆடுமென்
வெந்தபுண் நீக்க வெளிர்பச்சை - அந்த
அகக்கண் வழியே ஆர்ப்பரிக்கும் எண்ண
நிகழ்வுக்கும் உண்டே நிறம்
விளக்கம்: சந்தோஷம் வர்றப்போ மனசு முழுக்க வெள்ளை நிறம் தோன்றி சடுகுடு ஆடும். வெளிர்பச்சை பார்க்கிறப்போ நொந்துபோன மனசுக்குள்ளே ஒரு இதமான உணர்வு வரும். கண் மூடி அகக்கண் வழியாக மனசை ஒன்றுபடுத்தும்போது ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு நிறம் உருவாகும்
***
5. ஒன்றுமில்லை - மீனாக்ஸ்
எப்போதும்இது தான் பதில்.
கண்களில் ஆர்வம் மின்ன
பிச்சை கேட்பவனுக்கு.
கோபத்தில் இருக்கும் மனைவியிடம்
பரிவுடன் கணவன்
"என்னம்மா?ஏன் ஒரு மாதிரி இருக்கே"
என்று கேட்கும் கேள்விக்கு.
"எத்தனை தங்கப் பதக்கம் வாங்கினீர்?"
இந்திய ஒலிம்பிக்
அணியிடம்கேட்ட போது.
"எத்தனை நன்மை செய்தாய் மக்களுக்கு?"
என அரசு இயல் வியாதியிடம்
எதிரிக்கட்சிக்காரன் கேட்டபோது.
அப்புறம் என்னிடம்
நீங்கள்கேட்கும்போது,
"ஏதோ கவிதையென்று எழுதினாயாமே?"
***
6. வானவில் மனிதர்கள் - ஷக்திபிரபா
அண்ணாந்துப் பார்க்கிறேன்
மேகங்களின் முழக்கத்தைத் தொடர்ந்து
மின்னலின் கேலிச் சிரிப்புகள்.
பெருக்கெடுத்த மழையின் வேகம்
மெல்லச் சாரலாய் குறைந்தது.
வெளிச்சம் பாய்ச்சிய கதிரோன்
துணையில் வானம்
நீலத்தைத் தொலைத்து
வர்ணம் பூசியிருந்தது.
மெருகேறியிருந்தது.
இங்கேயும் நிகழ்ச்சிகள்
இடிதாங்கியாய் இறக்கி
கொக்கரிப்புகளாய் இடித்துதனியாய்,
மழையாய் உருக்கிபல
கோணங்களில் வெளிச்சம்
பரப்பிவர்ணம் பூசிக்கொண்டு
வசீகரமாய் மெருகேற்றியிருக்கிறது
என்னை.
***
7. தொலைந்து போனவை - ஷக்திபிரபா
காலையிலிருந்தே
துழாவிக்கொண்டிருக்கிறேன்
எழுதுகோல் ஒன்று கைக்கெட்டவில்லை
ராசியான பொருளொன்று
கை நழுவிப் போகையில்
பாசிபடிந்து மனமெங்கும்
இருள் கவ்விக் கிடக்கிறது
மேஜையின் மேலேகைப்பையின்
அடக்கத்தில்அலுவலக கேபினின்
அடுக்குக் கோப்புக்குள்
ஜீன்ஸ் பாக்கெட்டின்
ரகசிய அறையில்
அடுக்களையில் அடுக்கிய
பாட்டிலின் நடுவில்
குளிக்கச் சென்ற குழாயடி
பக்கத்தில் மிச்சம் வைக்காமல்
அத்தனை வேட்டைகள்
மாய்ந்து தேடியதன்
ஏமாற்ற மிச்சங்கள்
பின்னோக்கியே பயணத்தை
உற்று நோக்கினால்
அறியாப் பருவத்தில்
அநியாயமாய் தொலைத்ததுண்டு
பல்பம் ஸ்லேட்டுடன்
பென்சிலும் போனதுண்டு
பத்து நிமிட திட்டிற்கு பிறகு
புதிதாய் ஒன்று
பாக்கேட்டில் முளைக்கும்
சேர்ந்து தேட அம்மாவும் அப்பாவும்
சிரித்து கோள்மூட்டி
பொய்க் கோப பூச்சுடன்
கூடவே தேடும் அருமைத் தங்கை
தொலைந்து விட்ட
காதலைக் கூட
தேடிச் சேர்த்த நண்பர் குழாம்.
அப்பொழுதெல்லாம்
தொலைந்தால் கிடைக்கும்
புதிதாய் அழகாய்
வேறொன்று முளைக்கும்.
பத்து மணி நேரத்
தேடலின் விடையாய்
ஷர்ட் பாக்கெட்டின்
பதுங்கியே இருந்த
பேனாவும் கிடைத்தது,
சோர்வும் பறந்தது
பேனாவும் பென்சிலும்
போனாலும் கிட்டிவிடும்
நிஜமாய் தொலைத்த
பட்டியல் நீளம்
சமீபத்தில் தொலைந்த
நண்பனைச் சேர்த்து.
சொல்லாமல் கொள்ளாமல்
ஒழிந்த போன உணர்வுகளும்
உறவுகளும் நட்பும் சுற்றமும்
நெருக்கமும் இளமையும்
தேடிக்கொண்டே
நாளைக் கழிக்கிறேன்
தொலைந்தவைகள் இன்றும்
தொலைந்தவைகளாகவே.
***
8. தொலைந்தவை - ஐயப்பன்
திரைத் தாரகைகளை வாழ்வில்
நிஜத்தாரகைகளாய் எண்ணிதன்
வாழ்வை தொலைக்கும் மூடர்கள்
-0-
மண்ணில் தொலைத்து தன்னை
விண்ணில் தேடும் மானிடர்கள்.
கருக்கல் தொடங்கும் நேரம்
எப்போதோ தொலைத்த
நிம்மதியை தேடி
தெருவோரம் ஓடும் மக்கள்
இவர்களிடையே
எதையும் நான் தொலைத்ததாய்
நினைவில் இல்லை.
-0-
இருந்தும் ஏதோ ஒன்றை
இழந்தேனென்று நிதமென்னை
மனம் சாடுகிறது
தினமும் எனைத்தின்னும்
அலுவலகப் பணிப் பூதமும்
சிலநேரம் ஓய்வுணவை
எனக்களிக்கும்
அந்தக் கணங்களிலும்
தொலைந்த எதையோ தேடி
விடியலை தேடும் வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தவை தேடி மனம் ஆர்ப்பரிக்கும்
-0-
ஒருநாள் விடியல்... காலைநேரம்
கண்ணாடி முன் கண்விழிக்க
அடடாஎன்முகம் எங்கே காணவில்லை
***
9. என் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பயணம் - ஷக்திபிரபா
ஒன்றுமில்லா
வெளிச்சப் புள்ளியாய்
தொலைந்தே போனேன்
மற்றொரு கிரகத்திற்கே
சென்றாலும்துரத்தியே வந்தனர்
வானவில் நிறமிகளாய்
மனிதர்கள்
தொடுவானமாய் நானும்
தப்பி ஓடிக்கொண்டே
***
10. ஒன்றுமில்லை - ஐயப்பன்
இருக்கிறதாம் சிலர் சொன்னார்கள்தேடினேன் ஒன்றுமில்லைஇல்லை என்றால் ஆதாரம் தேடினேன்ஒன்றுமில்லை...
ஏதோ ஒரு உணர்வு உள்ளுள் ஓங்கரித்து எழுந்தாலும்உண்மையில் கடவுளும் காதலும்ஒன்றுமில்லை தான்
***
11. ஒன்றுமில்லை -
இரா.அருள்குமரனின் வசனம் வெண்பாவானது கே.வி.ராஜாவின் வரிகளில்.
தன்னகத்தே கொண்டதை வையகத்தில் தேடினேன்
கண்ணெட்டும் தூரமெங்கும் காணவில்லை - பின்னரே
உன்னுள் இருப்பதை ஊரெங்கும் தேடினால்
ஒன்றுமில்லை என்ற(து) உலகு
***
12. தொலைதூர தொடுவானம் - ஐயப்பன்
தொலைதூர தொடுவானம்
வெகுதூரம் இருந்தாலும்
அருகருகே இருப்பது போல்
அழகாய் ஓர் கனவு வரும்
கனவில் வரும் தேவதைகள்
கை நிறைய வரம் தந்தும்
கண்விழிக்கும் நேரத்திலே
இருப்பதுவோ ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை என்றானதை
ஒவ்வொன்றாய் கோர்த்துவைக்க
அழகான வானவில்லாய்
அத்தனையும் அருகருகே
அருகருகே பலநிறங்கள்
அத்தனையும் கண்பறிக்கும்
அதனருகே போகையிலே
நிறம் மாறும் நிறமியாய் நான்
நான் தேடும் வெளிச்சப் புள்ளி
வெகுதூர விண்வெளியில்
கைக்கெட்டா தூரத்தில்
அது தொலைதூர தொடுவானம்
***
13. ஒர் இந்தியக் கோலம் - பா நந்தன்
சில வெளிச்சப் புள்ளிகளோடு
அந்த கோலம் ஆரம்பிக்கப்பட்டது.
வலப்புறமும் இடப்புறமும்ஒரே மாதிரி
மேலும் கீழும் ஒரே மாதிரி
ஆனால் ஒவ்வொன்றும் ஒரு மாதிரி
எங்கோ இருக்கும்
ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்து
ஏதேதோ புள்ளிகளை
தொட்டுக் கொண்டு ஏங்கியபடி
எங்கேயோ முடியும் கோடுகளுடன்
தொடரப்பட்டது அந்தக் கோலம்.
ஓர் இடத்திலும்
புள்ளி பிசகாத கோலம்
எப்படியோ கடைசியில்
கோணலாகிவிட்டிருந்தது
அவ்வெளிச்சப் புள்ளிகளின்
சுவடுகளே இல்லாமல்.
***
14. ஒன்றுமில்லை - கீதா
ஆம் நண்பா..
மறைந்த உன்நினைவுகளைத் தவிர
வேறொன்றும் இல்லை
விபத்தில் சிக்கியதும்
வலியில் வாடியதும்
நீ மட்டும் இல்லை..
என் மனதும் தான்
வேதனைப் பூக்களை
வார்த்தையில் கோர்த்தேன்
மனதினுள் பூட்டிவைத்தேன்
அது உனக்கேயானது
தவழ்ந்து வருவது
மாலையின் வாசமான
உன் நினைவுகள் மட்டுமே
வேறொன்றும் இல்லை..
***
15. ஒரு வெண்பா(ம்) - கே.வி.ராஜா.
எடுத்துக் கொடுப்ப தெளிதான வேலை
தொடுப்பதுவே என்பெரும் தொல்லை - அடுத்தவற்(கு)
ஏற்றாற்போல் வார்த்தை எழுதிவைத்து நான்வடிக்க
கற்பனையில் வந்த கவி
***
இரண்டாவது இணையக் கவியரங்கம்
இரண்டாம் இணையக் கவியரங்க தொகுப்பு
பங்கு பெற்றவர்கள்:
கீதா ( மின்னஞ்சல் மூலம்)
உதயகுமாரி (நிலா) (மின்னஞ்சல் மூலம்)
கஜன் சண்முகரெட்ணம்
ஐயப்பன்
பிரபா
சைலஜா
கிருபாசங்கர்
பார்வையாளர்கள் :
ராமச்சந்திரன்
கணேசஷ்
************
எதிர்பார்ப்புகள்
************
1.
மன்னனை நினைத்த நெஞ்சில்
மாற்றங்கள் ஏதும் இல்லை
மாலை கைகூடி வருமோ?
மங்கையின் எதிர்பார்பிங்கே.
மகளின் மனம் அறிந்த பின்னும்
பழி யேதும் நேரா வண்ணம்
மங்கை மனம் மாறி வருமோ?
மற்றவளின் எதிர்பார்பிங்கே
ஓர்பழியும் நேர்ந்திடாமல்
உறவுகள் மனம் சூழ்ந்திருக்க
உறியவளின் கரம் பிடிக்க
மன்னனவன் எதிர்பார்பிங்கே..
மன்னன்,மங்கை மனம்மறிந்தும்
மற்றவர்கள் நிலை புறிந்தும்
மாற்றம் யேதும் நிகழ்ந்திடாதோ
நண்பர்களின் எதிர்பார்பிங்கே
கட்சிகள் ஒன்று எனும்போதும்
கருதுக்கள் மரித் தொன்றும்
மக்களின் பார்வைக்கேற்ப்ப
அவரவர் எதிர்பார்பிங்கே.
**************
By :கீதா
**************
2.
கவிதை பாடும் நெஞசங்களே!
தமிழால் நாம் இணைந்தோம்! - அவள்
தமிழாள் தாள் பணிவோம்! !
கவிதை புனைவததைத்தான் காதல் கொண்டேன்நான் - எனினும்
கடமை பெரிதெனவெண்ணி கல்விதனை கைப்பிடித்தேன்!
புவியதனில் இருதாரம் கொண்டவர் போல்த்தவித்தேன்!
நிலமைதனை உரைத்தேன்! நீவிரனுசரித்தால் பிழைத்தேன்!!!
எதிர்பார்ப்பினில் தானெம் வாழ்வே ஓடுகிறது!
எதிர்ப்பாரெவர் தானிந்த வையகத்தின் ஓட்ட்த்தினிலே!
பள்ளிசெல்லும் குழந்தையின் மனதில்புள்ளி எதிர்பார்ப்பு!
அள்ளிக்கொஞ்சும் அன்னைக்க்கோ ஆயிரமெதிர்பார்ப்பு!
வெள்ளிக்கொலுசு மங்கைக்கு மன்சுநிறையெதிர்பார்ப்பு!
உள்ளவரை உலகிலெமக்கு இருக்குந்தான் எதிர்பார்ப்பு!
எதிர்பார்ப்பதால் தானெமக்குக் கிடைக்கும் ஏமாற்றமே -அதற்காய்
எதிர்பார்க்காமல் இருந்தால் எதுவுந்தான் கிட்டாதே!
எதிர்ப்பார்ப்பில் தானெங்கள் நாட்களுந்தான் ஓடுகிறதே!
எதிர்பார்ப்பதெல்லாம் நடந்தாலும் இருக்காதே
நன்றியுடன் நிலா
*******************************************
3.
அமாவாசை இரவில்
உடைத்து எறியப்பட்ட
நிலாத் துண்டுகள்
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறது
அந்த நட்ஷத்திர துண்டில் நீ
எங்கிருக்கிறாய் என்று தான்
தெரியவில்லை....
என்னெதிர் வந்து
முட்டச்சிறகில் எனை மூடி
மல்லிகை கொண்டு
மஞ்சம் அமைத்து
கண்ணே மணியே
கொஞ்சுதல் வேண்டாம்
பசியறிந்து சோறூட்டி
தேவையறிந்து தாலாட்டி
மடிமீதெனை கிடத்தி
தாயாய் மாறவேண்டாம்
இங்கெனக்கு அறிவு தந்து
எத்தனையோ இடர்களிடை
காத்து வளர்த்த தந்தையாய்
வரவும் வேண்டாம்
நீயற்ற பொழுதுகள் என்றும்
நகக்கண்ணில் துளையிட்டு
அமிலத்தை ஊற்றியது போல்
சொல்லொண்ணா வலியினால்
உள்ளத்தை துளைக்கும்
உனை மறக்க விழி வலிக்க
கணினியுடன் நடு நிசி வரை
தினம் நடக்கும் போராட்டங்கள்
விழி அயர்ந்த நேரத்தில்
கனவுகளுடன் தொடரும்
எந்தன் கால்கள் ஒய்ந்திடும் நேரம்
எந்தன் கைகள் களைத்திடும் நேரம்
கண்களின் பார்வை மங்கிடும் நேரம்
என்னை எடுத்து மண்ணில் சேர்க்கும்
அந்நாளிலேனும் வருவாயா??
அன்புடன்
ஐயப்பன்
*************
4.
நிலம்
----------
மனிதா...
சுவாசத்தை இழக்கையில்
என்னுடன் சங்கமிக்கின்றாய்.
உனக்குமட்டும் ஏன் மரியாதை ?
என்னில் அசுத்தங்களை வாரி இறைக்கும் நீ
இறுதியில் நீயும் அசுத்தம் அடைந்தவனாய்
என்னுடன் சேர்கின்றாயே !
கண்ட இடத்தில் காறிவிட்டு
கைவீசும் திசையில் குப்பைபோட்டு
வாழ்வு காட்டும் நீ
ஆட்சி செய்யும் அரசாங்கம்
அநியாயக் குப்பைகளுக்கு
அந்நியச்செலாவாணி தரவேண்டுமோ ?
அதைக்கேட்க உனக்கேது நியாயம் ?
அடுத்தமுறை அதற்கென்ற இடத்தில் குப்பையை எறி !
நீர்
---------
என்னால் பல நன்மைகள்
பிரதிபலனாய்
எனக்கு அசுத்தங்கள்
தாகம் என்றால் என்னை நாடும் நீ
தகுந்த வேலை செய்யத்
தவறியதால் எனக்குத் தட்டுப்பாடோ ?
குளமெல்லாம் கூவாமாகுது
கங்கையெல்லாம் கட்டாந்தரையாகுது
கவனியாமல் இருந்துவிட்டு
கடைசியில் மற்றோர் மீது பழியோ ?
மேல்நாட்டைக் கவனித்தாயா ?
என்மகனாக மின்சாரம் வந்தான்
என் அசுத்த பாகங்கங்கள்
அவனால் சுத்தம்செய்யப்படுகின்றன
பல இடங்களில்
நீ மட்டும் என்னை
மேலும் மேலும்
அசுத்தம் செய்து கொண்டிருக்கின்றாய் .
உந்தன் சோம்பலுக்குச்
சற்றுத்தள்ளி முற்றுப்புள்ளி வை.
அதுவரை எனக்காக தொழிற்படப் புறப்படு
காற்று
---------
என்னை உள்ளிழுக்கும் நீ
வெளிவிடுகையில் அசுத்தத்தை
தருகின்றாயே !
தாவரத்தைக் கவனித்தாயோ ?
அது என்னைச் சுத்தப்படுத்த
நீ மட்டும் எந்தன் எதிரியாய் ஏன்தானோ ?
சமையல் வீட்டில் புகை
சத்தமிடும் தொழிற்சாலையிலும் புகை
சச்சரவான வாகனப்புகை
பொதுவாய்ப் பொறாமையில் புகையும் மனிதனே,
கொஞ்சம் கவனம் செலுத்து என்னில் !
ஆகாயம்
---------
அண்டவெளியின் பாதை நான்
அழகான காட்சி நான்
அந்தியிலே சிவந்தாலும்
என்நிறம் நீலம்தான்
என்னை ஆராயாது உறங்குவதேனோ ?
முகிலைக் கண்டு என்னை வெள்ளையென்பாய்
கங்குலைக் கண்டு கருப்பென்பாய்
மங்கையைக் கண்டு என்னை மறந்திருப்பாய்
மொத்தத்தில் விஞ்ஞானம் வேண்டாது
என்றன் அருமை மறப்பதேனோ ?
நெருப்பு
--------------
கதிரவன் உறங்குகையில்
என்னை அரவணைக்கும் மனிதா
தீ என்றால்
அழிப்பது என்ற எண்ணத்தில்
என்னை அவமதிப்பதேனோ ?
சுடரானால் சுகம் அளிக்கும் நான்
சுவாலையானால் சோகம் தருகின்றேன்.
சுடராக்குவதும் சுவாலையாக்குவதும் நீதானே ?
காற்று என்றன் சகோதரன்
எண்ணெய் என்றன் நண்பன்
வெப்பம் அதிகரிப்பின் நான் யமன்
மாயை நிறைந்த வாழ்விலிருந்து
உன்னை நான் மீட்கிறேன்
சில சமயங்களில்
அதற்கு நீ நன்றி சொல்ல மறந்ததேனோ ?
************
ஐம்பூதங்களுக்கு உயிர் கொடுத்த
அவதானி கஜன்
***************
5.
பிறந்தமண் விட்டுவந்து
. . பெற்றவர்கள் தூரநிற்க
இறக்கின்ற மனிதத்திற்கு
. . இறைவாநீ அருள்புரி
தனம்தேடி வனம்வந்து
. . தரம்கெட்ட வாழ்க்கைகண்டு
மனம்நோக வருந்துவோர்
. . வையகத்தில் கூடுதேகாண்
செப்புகின்ற மொழியினில்
. . செந்தமிழும் குறையுதிங்கு
எப்பொழுதும் எம்மவர்கள்
. . ஏன்தானோ எண்ணவில்லை
செய்கின்ற செயல்களும்
. . தென்படும் நிகழ்வுகளும்
மெய்யாக எடுத்துரைக்கும்
. . வேற்றாரின் கலாச்சரம்
அருந்துகின்ற உணவினிலே
. . அருஞ்சுவையும் இல்லாது
மறுக்கிறது மனமிங்கு
. . மரிக்கிறது மனிதநாக்கு
ஓய்வென்ற போதினிலே
. . உகந்தஅன்பு இல்லாமல்
தேய்வுதரும் குடிவகைகள்
. . தேடிவரும் பழக்கங்கள்
வயோதிபக் காலத்திலே
. . வாழ்வென்றும் தனிமையிலே
அயோக்கியனாய் பிள்ளைகளும்
. . .அருகேதான் வரமாட்டார்
கொட்டுகின்ற பனிமழையும்
. . கொல்லுகின்ற கடும்குளிரும்
தொட்டுவிட்டு துன்புறுத்தும்
. . தொடர்ந்துநின்று தொல்லைதரும்
நல்லதென்று நினைத்தேமே
. . நாடுபடுத்தும் சீரழிவில்
கொல்லப்படும் மனிதமனம்
. . சுகப்படும் நிலையுண்டோ ?
எதிர்பார்த்து எதிர்பார்த்து
. . ஏமாறும் மக்களது
முதுமையில்லா மூளைதானே
. . முட்டாளாய் ஆக்குதெம்மை
***************************
அவதானி கஜன்
***************************
6.
மின்னல்கள்
_________
தினம் விடியல்
கறுப்பான இதயத்திற்கு
மங்களமாய் மஞ்சள் தொட்டு
அழைப்பு விடுக்கும் சூரிய கீற்று
நேற்றைய தோல்விகள்
நீர்கோலமாய்
கண்ணீர் கோலமாய்
கறைந்து போகும்
கண்ணீரில்
கலந்த மை
திட்டுத்திட்டாய்
நினைவுகளாய் அப்பி நிற்க
இன்றைய நாள் மீண்டும்
ஏமாற தயாராகும் இதயங்கள்
பசிக்கு உணவும்
ருசிக்க உடலும்
புகழும் பணமும்
காதலும் இளமையும்
உறவும் நினைவும்
மதிப்பிட முடியா
பலதை தொலைத்து
பரிதவித்து உலக வீதியில்
எங்கெங்கோ தேடிக் களைத்து
ஏமாற்றத்தை மட்டுமே
பூசிக்கொண்டு
வீடு திரும்பும் பகடைக்காய்கள்
இதயராகம்
மீட்டும் பஞ்சப்பாட்டுக்கள்
பாலைவனத்தில் கள்ளியாய்
ஆங்காங்கே நட்சத்திர மின்னல்கள்
******************
சக்தி பிரபா
7.
வண்ணத்துப் பூச்சி
*************
இன்னும் வரவில்லை என் வண்ண்த்துப்பூச்சி,
நேற்றைக்கு இதெநேரம் இலைப்பச்சை
நடுவினிலே,இளமேனி தான்விரிந்த ,
மலர்மீது மது அருந்த வந்தது,
அடர்த்தியான பழுப்பு நிறத்தில்
கறுப்பு புள்ளிகளிட்ட இறக்கை
சட்டை அணிந்திருந்தது..
சில நேரங்களில் மலரைவிட
வண்னத்துப்பூச்சிகளே அழகாக உள்ளன,
அழகை ரசிக்கும் போதிலேயே
அது பறந்து போய்விட்டது,
இன்றைக்கும் வருமென்று
எதிர்பார்த்துக் கத்திருக்கிறேன்,
அது வேறு ஒருமலரைத்
தேடிப்போய்விட்டதை அறியாமல்...
**********
ஷைலஜா
***********
பங்கு பெற்றவர்கள்:
கீதா ( மின்னஞ்சல் மூலம்)
உதயகுமாரி (நிலா) (மின்னஞ்சல் மூலம்)
கஜன் சண்முகரெட்ணம்
ஐயப்பன்
பிரபா
சைலஜா
கிருபாசங்கர்
பார்வையாளர்கள் :
ராமச்சந்திரன்
கணேசஷ்
************
எதிர்பார்ப்புகள்
************
1.
மன்னனை நினைத்த நெஞ்சில்
மாற்றங்கள் ஏதும் இல்லை
மாலை கைகூடி வருமோ?
மங்கையின் எதிர்பார்பிங்கே.
மகளின் மனம் அறிந்த பின்னும்
பழி யேதும் நேரா வண்ணம்
மங்கை மனம் மாறி வருமோ?
மற்றவளின் எதிர்பார்பிங்கே
ஓர்பழியும் நேர்ந்திடாமல்
உறவுகள் மனம் சூழ்ந்திருக்க
உறியவளின் கரம் பிடிக்க
மன்னனவன் எதிர்பார்பிங்கே..
மன்னன்,மங்கை மனம்மறிந்தும்
மற்றவர்கள் நிலை புறிந்தும்
மாற்றம் யேதும் நிகழ்ந்திடாதோ
நண்பர்களின் எதிர்பார்பிங்கே
கட்சிகள் ஒன்று எனும்போதும்
கருதுக்கள் மரித் தொன்றும்
மக்களின் பார்வைக்கேற்ப்ப
அவரவர் எதிர்பார்பிங்கே.
**************
By :கீதா
**************
2.
கவிதை பாடும் நெஞசங்களே!
தமிழால் நாம் இணைந்தோம்! - அவள்
தமிழாள் தாள் பணிவோம்! !
கவிதை புனைவததைத்தான் காதல் கொண்டேன்நான் - எனினும்
கடமை பெரிதெனவெண்ணி கல்விதனை கைப்பிடித்தேன்!
புவியதனில் இருதாரம் கொண்டவர் போல்த்தவித்தேன்!
நிலமைதனை உரைத்தேன்! நீவிரனுசரித்தால் பிழைத்தேன்!!!
எதிர்பார்ப்பினில் தானெம் வாழ்வே ஓடுகிறது!
எதிர்ப்பாரெவர் தானிந்த வையகத்தின் ஓட்ட்த்தினிலே!
பள்ளிசெல்லும் குழந்தையின் மனதில்புள்ளி எதிர்பார்ப்பு!
அள்ளிக்கொஞ்சும் அன்னைக்க்கோ ஆயிரமெதிர்பார்ப்பு!
வெள்ளிக்கொலுசு மங்கைக்கு மன்சுநிறையெதிர்பார்ப்பு!
உள்ளவரை உலகிலெமக்கு இருக்குந்தான் எதிர்பார்ப்பு!
எதிர்பார்ப்பதால் தானெமக்குக் கிடைக்கும் ஏமாற்றமே -அதற்காய்
எதிர்பார்க்காமல் இருந்தால் எதுவுந்தான் கிட்டாதே!
எதிர்ப்பார்ப்பில் தானெங்கள் நாட்களுந்தான் ஓடுகிறதே!
எதிர்பார்ப்பதெல்லாம் நடந்தாலும் இருக்காதே
நன்றியுடன் நிலா
*******************************************
3.
அமாவாசை இரவில்
உடைத்து எறியப்பட்ட
நிலாத் துண்டுகள்
என்னைப் பார்த்து
கண் சிமிட்டுகிறது
அந்த நட்ஷத்திர துண்டில் நீ
எங்கிருக்கிறாய் என்று தான்
தெரியவில்லை....
என்னெதிர் வந்து
முட்டச்சிறகில் எனை மூடி
மல்லிகை கொண்டு
மஞ்சம் அமைத்து
கண்ணே மணியே
கொஞ்சுதல் வேண்டாம்
பசியறிந்து சோறூட்டி
தேவையறிந்து தாலாட்டி
மடிமீதெனை கிடத்தி
தாயாய் மாறவேண்டாம்
இங்கெனக்கு அறிவு தந்து
எத்தனையோ இடர்களிடை
காத்து வளர்த்த தந்தையாய்
வரவும் வேண்டாம்
நீயற்ற பொழுதுகள் என்றும்
நகக்கண்ணில் துளையிட்டு
அமிலத்தை ஊற்றியது போல்
சொல்லொண்ணா வலியினால்
உள்ளத்தை துளைக்கும்
உனை மறக்க விழி வலிக்க
கணினியுடன் நடு நிசி வரை
தினம் நடக்கும் போராட்டங்கள்
விழி அயர்ந்த நேரத்தில்
கனவுகளுடன் தொடரும்
எந்தன் கால்கள் ஒய்ந்திடும் நேரம்
எந்தன் கைகள் களைத்திடும் நேரம்
கண்களின் பார்வை மங்கிடும் நேரம்
என்னை எடுத்து மண்ணில் சேர்க்கும்
அந்நாளிலேனும் வருவாயா??
அன்புடன்
ஐயப்பன்
*************
4.
நிலம்
----------
மனிதா...
சுவாசத்தை இழக்கையில்
என்னுடன் சங்கமிக்கின்றாய்.
உனக்குமட்டும் ஏன் மரியாதை ?
என்னில் அசுத்தங்களை வாரி இறைக்கும் நீ
இறுதியில் நீயும் அசுத்தம் அடைந்தவனாய்
என்னுடன் சேர்கின்றாயே !
கண்ட இடத்தில் காறிவிட்டு
கைவீசும் திசையில் குப்பைபோட்டு
வாழ்வு காட்டும் நீ
ஆட்சி செய்யும் அரசாங்கம்
அநியாயக் குப்பைகளுக்கு
அந்நியச்செலாவாணி தரவேண்டுமோ ?
அதைக்கேட்க உனக்கேது நியாயம் ?
அடுத்தமுறை அதற்கென்ற இடத்தில் குப்பையை எறி !
நீர்
---------
என்னால் பல நன்மைகள்
பிரதிபலனாய்
எனக்கு அசுத்தங்கள்
தாகம் என்றால் என்னை நாடும் நீ
தகுந்த வேலை செய்யத்
தவறியதால் எனக்குத் தட்டுப்பாடோ ?
குளமெல்லாம் கூவாமாகுது
கங்கையெல்லாம் கட்டாந்தரையாகுது
கவனியாமல் இருந்துவிட்டு
கடைசியில் மற்றோர் மீது பழியோ ?
மேல்நாட்டைக் கவனித்தாயா ?
என்மகனாக மின்சாரம் வந்தான்
என் அசுத்த பாகங்கங்கள்
அவனால் சுத்தம்செய்யப்படுகின்றன
பல இடங்களில்
நீ மட்டும் என்னை
மேலும் மேலும்
அசுத்தம் செய்து கொண்டிருக்கின்றாய் .
உந்தன் சோம்பலுக்குச்
சற்றுத்தள்ளி முற்றுப்புள்ளி வை.
அதுவரை எனக்காக தொழிற்படப் புறப்படு
காற்று
---------
என்னை உள்ளிழுக்கும் நீ
வெளிவிடுகையில் அசுத்தத்தை
தருகின்றாயே !
தாவரத்தைக் கவனித்தாயோ ?
அது என்னைச் சுத்தப்படுத்த
நீ மட்டும் எந்தன் எதிரியாய் ஏன்தானோ ?
சமையல் வீட்டில் புகை
சத்தமிடும் தொழிற்சாலையிலும் புகை
சச்சரவான வாகனப்புகை
பொதுவாய்ப் பொறாமையில் புகையும் மனிதனே,
கொஞ்சம் கவனம் செலுத்து என்னில் !
ஆகாயம்
---------
அண்டவெளியின் பாதை நான்
அழகான காட்சி நான்
அந்தியிலே சிவந்தாலும்
என்நிறம் நீலம்தான்
என்னை ஆராயாது உறங்குவதேனோ ?
முகிலைக் கண்டு என்னை வெள்ளையென்பாய்
கங்குலைக் கண்டு கருப்பென்பாய்
மங்கையைக் கண்டு என்னை மறந்திருப்பாய்
மொத்தத்தில் விஞ்ஞானம் வேண்டாது
என்றன் அருமை மறப்பதேனோ ?
நெருப்பு
--------------
கதிரவன் உறங்குகையில்
என்னை அரவணைக்கும் மனிதா
தீ என்றால்
அழிப்பது என்ற எண்ணத்தில்
என்னை அவமதிப்பதேனோ ?
சுடரானால் சுகம் அளிக்கும் நான்
சுவாலையானால் சோகம் தருகின்றேன்.
சுடராக்குவதும் சுவாலையாக்குவதும் நீதானே ?
காற்று என்றன் சகோதரன்
எண்ணெய் என்றன் நண்பன்
வெப்பம் அதிகரிப்பின் நான் யமன்
மாயை நிறைந்த வாழ்விலிருந்து
உன்னை நான் மீட்கிறேன்
சில சமயங்களில்
அதற்கு நீ நன்றி சொல்ல மறந்ததேனோ ?
************
ஐம்பூதங்களுக்கு உயிர் கொடுத்த
அவதானி கஜன்
***************
5.
பிறந்தமண் விட்டுவந்து
. . பெற்றவர்கள் தூரநிற்க
இறக்கின்ற மனிதத்திற்கு
. . இறைவாநீ அருள்புரி
தனம்தேடி வனம்வந்து
. . தரம்கெட்ட வாழ்க்கைகண்டு
மனம்நோக வருந்துவோர்
. . வையகத்தில் கூடுதேகாண்
செப்புகின்ற மொழியினில்
. . செந்தமிழும் குறையுதிங்கு
எப்பொழுதும் எம்மவர்கள்
. . ஏன்தானோ எண்ணவில்லை
செய்கின்ற செயல்களும்
. . தென்படும் நிகழ்வுகளும்
மெய்யாக எடுத்துரைக்கும்
. . வேற்றாரின் கலாச்சரம்
அருந்துகின்ற உணவினிலே
. . அருஞ்சுவையும் இல்லாது
மறுக்கிறது மனமிங்கு
. . மரிக்கிறது மனிதநாக்கு
ஓய்வென்ற போதினிலே
. . உகந்தஅன்பு இல்லாமல்
தேய்வுதரும் குடிவகைகள்
. . தேடிவரும் பழக்கங்கள்
வயோதிபக் காலத்திலே
. . வாழ்வென்றும் தனிமையிலே
அயோக்கியனாய் பிள்ளைகளும்
. . .அருகேதான் வரமாட்டார்
கொட்டுகின்ற பனிமழையும்
. . கொல்லுகின்ற கடும்குளிரும்
தொட்டுவிட்டு துன்புறுத்தும்
. . தொடர்ந்துநின்று தொல்லைதரும்
நல்லதென்று நினைத்தேமே
. . நாடுபடுத்தும் சீரழிவில்
கொல்லப்படும் மனிதமனம்
. . சுகப்படும் நிலையுண்டோ ?
எதிர்பார்த்து எதிர்பார்த்து
. . ஏமாறும் மக்களது
முதுமையில்லா மூளைதானே
. . முட்டாளாய் ஆக்குதெம்மை
***************************
அவதானி கஜன்
***************************
6.
மின்னல்கள்
_________
தினம் விடியல்
கறுப்பான இதயத்திற்கு
மங்களமாய் மஞ்சள் தொட்டு
அழைப்பு விடுக்கும் சூரிய கீற்று
நேற்றைய தோல்விகள்
நீர்கோலமாய்
கண்ணீர் கோலமாய்
கறைந்து போகும்
கண்ணீரில்
கலந்த மை
திட்டுத்திட்டாய்
நினைவுகளாய் அப்பி நிற்க
இன்றைய நாள் மீண்டும்
ஏமாற தயாராகும் இதயங்கள்
பசிக்கு உணவும்
ருசிக்க உடலும்
புகழும் பணமும்
காதலும் இளமையும்
உறவும் நினைவும்
மதிப்பிட முடியா
பலதை தொலைத்து
பரிதவித்து உலக வீதியில்
எங்கெங்கோ தேடிக் களைத்து
ஏமாற்றத்தை மட்டுமே
பூசிக்கொண்டு
வீடு திரும்பும் பகடைக்காய்கள்
இதயராகம்
மீட்டும் பஞ்சப்பாட்டுக்கள்
பாலைவனத்தில் கள்ளியாய்
ஆங்காங்கே நட்சத்திர மின்னல்கள்
******************
சக்தி பிரபா
7.
வண்ணத்துப் பூச்சி
*************
இன்னும் வரவில்லை என் வண்ண்த்துப்பூச்சி,
நேற்றைக்கு இதெநேரம் இலைப்பச்சை
நடுவினிலே,இளமேனி தான்விரிந்த ,
மலர்மீது மது அருந்த வந்தது,
அடர்த்தியான பழுப்பு நிறத்தில்
கறுப்பு புள்ளிகளிட்ட இறக்கை
சட்டை அணிந்திருந்தது..
சில நேரங்களில் மலரைவிட
வண்னத்துப்பூச்சிகளே அழகாக உள்ளன,
அழகை ரசிக்கும் போதிலேயே
அது பறந்து போய்விட்டது,
இன்றைக்கும் வருமென்று
எதிர்பார்த்துக் கத்திருக்கிறேன்,
அது வேறு ஒருமலரைத்
தேடிப்போய்விட்டதை அறியாமல்...
**********
ஷைலஜா
***********
முதலாம் கவியரங்கம்
விரைவில்....